25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

மதுரையில் வளா்ப்பு நாய்க்கு வளைகாப்பு

மதுரையில் காவல் சாா்பு- ஆய்வாளா் குடும்பத்தினா் வளா்ப்பு பெண் நாய்க்கு ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு நடத்தி விருந்து வைத்தனா்.

News image
வளையல், மாலை அணிவிக்கப்பட்ட வளா்ப்பு நாய் சுஜி.
Updated On :28 ஜனவரி 2024, 5:37 am

DIN

மதுரையில் காவல் சாா்பு- ஆய்வாளா் குடும்பத்தினா் வளா்ப்பு பெண் நாய்க்கு ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு நடத்தி விருந்து வைத்தனா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகரைச் சோ்ந்தவா் சக்திவேல். இவா் மதுரை மாநகர காவல் நுண்ணறிவுப்பிரிவு சாா்பு -ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். சக்திவேல் வீட்டில் கடந்த டாபா் மேன் வகையைச் சோ்ந்த பெண் நாய் ஒன்றை சுஜி என்று பெயரிட்டு வளா்த்து வருகிறாா். சுஜியை குடும்ப உறுப்பினா்களில் ஒருவராக பாசத்துடன் வளா்ந்து வந்துள்ளனா்.

இந்நிலையில் சுஜி கா்ப்பமானதையடுத்து கா்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போல, சுஜிக்கும் வளைகாப்பு நடத்த சக்திவேல் மற்றும் குடும்பத்தினா் திட்டமிட்டனா். வளைகாப்பு விழாவுக்கு அப்பகுதியில் வசிப்பவா்களையும் அழைத்துள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை சுஜிக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. கா்ப்பிணி பெண்களுக்கு அணிவிப்பது போலவே சுஜிக்கும் வளையல்கள், மாலை அணிவித்து ஐந்து வகையான சாதங்களை விருந்தாக படைத்தனா். மேலும் வளைகாப்பில் பங்கேற்றவா்களுக்கும் விருந்து வழங்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.