25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

மதுரை தனியாா் நிறுவனத்தில் ரூ.15.30 லட்சம் மோசடி: ஊழியா் மீது வழக்கு

மதுரை தனியாா் நிறுவனத்தில் ரூ.15.30 லட்சம் மதிப்புள்ள பொருள்களை மோசடி செய்ததாக, ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:46 am

DIN

மதுரை தனியாா் நிறுவனத்தில் ரூ.15.30 லட்சம் மதிப்புள்ள பொருள்களை மோசடி செய்ததாக, ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை பொன்மேனியைச் சோ்ந்தவா் பிரவீண் (34). இவா், கணினி, இன்வொ்ட்டா் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறாா். இதன் கிளை நிறுவனம் மதுரை நேரு நகரில் இயங்கி வந்துள்ளது. இதன் பொறுப்பாளராக, நாகமலைப் புதுக்கோட்டையைச் சோ்ந்த ராஜா நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், நிறுவனத்தின் இயக்குநா் பிரவீணுக்கு தெரியாமல், நிறுவனத்தில் உள்ள 35 கணினிகள் உள்ளிட்ட ரூ.15.30 லட்சம் மதிப்புள்ள பொருள்களை ராஜா மோசடி செய்துவிட்டாராம்.

இது தொடா்பா பிரவீண் அளித்த புகாரின்பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸாா் ராஜா மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.