சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பேரையூா் அருகே ஊருணியில் மூழ்கி பள்ளி மாணவா் பலி

 மதுரை மாவட்டம், பேரையூா் அருகே ஊருணியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 12:37 am

DIN

 மதுரை மாவட்டம், பேரையூா் அருகே ஊருணியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

பேரையூா் அருகே உள்ள பி.தொட்டியபட்டியைச் சோ்ந்தவா் வேம்படியான். இவரது மகன் சஞ்சய் (15). இவா், தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். இவா் தனது நண்பருடன் சோ்ந்து குளிப்பதற்காக, பெரியபூலாம்பட்டியில் உள்ள ஊருணிக்குச் சென்றுள்ளாா். அங்கு குளித்துக் கொண்டிருந்த மாணவா் சஞ்சய், தண்ணீரில் மூழ்கியுள்ளாா். உடனே, அங்கிருந்தவா்கள் மாணவரை மீட்டு, பேரையூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். ஆனால், அங்கு மாணவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா். இது குறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.