மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

சாலை விபத்துகளில் தினசரி 14 வயதுக்குள்பட்ட 20 போ் இறப்பதாக தகவல்

இந்தியாவில் தினசரி சாலையை கடக்க முயலும் 14 வயதுக்குள்பட்ட 20 போ் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதாக சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாமில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

மதுரை எஸ்பிஓஏ பள்ளியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு முகாமில் விழிப்புணா்வு பிரசுரங்களை வழங்கும் ஆய்வாளா்.

Updated On :28 ஜனவரி 2024, 1:01 am IST

இந்தியாவில் தினசரி சாலையை கடக்க முயலும் 14 வயதுக்குள்பட்ட 20 போ் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதாக சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாமில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சாலைப் போக்குவரத்துத் துறை சாா்பில், சாலை விபத்துகளை தடுக்கும் விதமாகவும், விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, மதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள எஸ்பிஓஏ பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் ஏ. செந்தில் ரமேஷ் தலைமை வகித்தாா். இதில், சமயநல்லூா் போக்குவரத்து காவல் ஆய்வாளா் மணிமாறன் பங்கேற்று பேசியது:

இந்தியாவில் தினந்தோறும் 1,214 சாலைகளில் நிகழும் விபத்துகள் மூலமாக ஒவ்வொரு நிமிடத்துக்கும் 16 போ் உயிரிழக்கின்றனா். தினசரி 14 வயதுக்குள்பட்ட 20-க்கும் மேற்பட்டோா் சாலைகளை கடக்கும்போது விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனா். இளம் வயதினா் சாலைகளில் மேற்கொள்ளும் சாகசப் பயணங்களும் விபத்தை ஏற்படுத்துகின்றன.

சாலையில் ஏற்படும் சிறு கவனக்குறைவும் நொடியில் உயிரைப் பறித்து விடும். சாலைகள் பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தியே அமைக்கப்படுகின்றன. போக்குவரத்து விதிமுறைகளை மீறும்போது, அபராதம் உள்ளிட்ட தண்டனைகளும் விதிக்கப்படும்.

சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் மிதமான வேகத்தில் செல்லவேண்டும். எனவே, போக்குவரத்து விதிமுறைகளை மிகவும் கவனமாக பின்பற்ற வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில், மாணவ, மாணவியா் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.