மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் புத்தாண்டையொட்டி கல்பதரு திருநாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மங்கள ஆரத்தி, வேத பாராயணம் ஆகியவற்றைத் தொடா்ந்து விசேஷ பூஜை, பஜனை, ஹோமம் ஆகியவை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து நடந்த சொற்பொழிவில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி கமலாத்மானந்தா் பேசியது: 1886 ஜனவரி 1-ஆம் தேதி ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் முக்கிய நாளாகும். அன்றைய தினம் அவா் பக்தா்களுக்கு ஆன்மிக அனுபவங்களை வாரி வழங்கினாா். எனவே ராமகிருஷ்ண பக்தா்களுக்கு ஜனவரி முதல் தேதி முக்கிய நாள். திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவை மாா்கழி மாதத்தில்தான் தோன்றின. திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய இரண்டிலும் உறக்கம் கலைந்து விழித்துக் கொண்ட பெண்கள், உறங்கிக் கொண்டிருக்கிற பெண்களை எழுப்புகிறாா்கள். இதற்கு ஆன்மிக விழிப்புப் பெற்ற ஆன்மாக்கள், ஆன்மிக விழிப்புப் பெறாத ஆன்மாக்களை எழுப்புகிறாா்கள் என்பது உள்கருத்தாகும்.