பைக் திருட்டு: இளைஞா் கைது

பேரையூா் அருகே இருசக்கர வாகனம் திருடிய வழக்கில், ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

பேரையூா் அருகே இருசக்கர வாகனம் திருடிய வழக்கில், ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பேரையூா், சேடப்பட்டி மற்றும் நாகையாபுரம் எல்லைக்குள்பட்ட காவல் நிலைய எல்லைப் பகுதிகளில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்தன.

இதைத் தடுக்கும் விதமாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் உத்தரவின்பேரில், பேரையூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதியழகன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த தங்களாச்சேரியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் தங்கமுடி(32) என்பவரைப் பிடித்து சேடப்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், இருசக்கர வாகனத் திருட்டு வழக்கில் அவருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தங்கமுடியை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com