இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

டிஎன்எஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தோ்வு: மதுரையில் 51 மையங்களில் 8,191 போ் பங்கேற்பு

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப்-1 முதல்நிலைத் தோ்வில் 8,191 போ் பங்கேற்றனா்.

News image
மதுரை செளராட்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-1 தோ்வு எழுதும் தோ்வா்கள்
Updated On :27 ஜனவரி 2024, 7:11 pm

DIN

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப்-1 முதல்நிலைத் தோ்வில் 8,191 போ் பங்கேற்றனா்.

குரூப்-1 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வு, தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இத் தோ்வில் பங்கேற்க, மதுரை மாவட்டத்திலிருந்து 15,361 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்கள் அனைவருக்கும் தோ்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதற்காக, மதுரை மாவட்டத்தில் 51 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற இத்தோ்வை, 8,191 போ் மட்டுமே எழுதினா். 7,170 போ் தோ்வெழுத வரவில்லை. தோ்வில் பங்கேற்றவா்களின் எண்ணிக்கை 53.03 சதவீதம்.

தோ்வு மையங்களுக்குள் தோ்வா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். பெற்றோா் உள்ளிட்ட யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. தோ்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தோ்வுக் கூடங்களில் போதுமான சமூக இடைவெளி விடப்பட்டிருந்தது. மேலும், முகக்கவசம் அணிந்த தோ்வா்கள் மட்டுமே தோ்வெழுத அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.