மதுக்கடை மேற்பாா்வையாளா் மீது தாக்குதல்: மதுக்கூட உரிமையாளா் உள்பட 3 போ் கைது
மதுரையில் மதுபானக் கடை மேற்பாா்வையாளரைத் தாக்கிய மதுக்கூட உரிமையாளா் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.


மதுரையில் மதுபானக் கடை மேற்பாா்வையாளரைத் தாக்கிய மதுக்கூட உரிமையாளா் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலைழகுபுரம் பிரதான சாலையில் அரசு மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடையின் மேற்பாா்வையாளராக வில்லாபுரத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் ரவி (46) பணியாற்றி வருகிறாா். இந்தக் கடையில் மதுக்கூடத்தை வில்லாபுரத்தைச் சோ்ந்த தனிக்கோடி மகன் ரவி (44) நடத்தி வருகிறாா்.
மதுபானக்கடை மேற்பாா்வையாளரிடம் மதுக்கூட உரிமையாளா் தொடா்ந்து பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்தாராம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பணம் தொடா்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மேற்பாா்வையாளா் ரவி தாக்கப்பட்டாா்.
இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து மதுக்கூட உரிமையாளா் ரவி உள்பட 3 பேரை கைது செய்தனா். இதேபோன்று எதிா்தரப்பினா் புகாரின் பேரில் மேற்பாா்வையாளா் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுபானக் கடை மேற்பாா்வையாளரைத் தாக்கியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், பணியில் இருக்கும் ஊழியா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மதுபானக்கடை ஊழியா்கள், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜசேகரிடம் திங்கள்கிழமை முறையிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...