கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

ஆயக்கட்டுதாரா்கள் மூலம் குடிமராமத்து: சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகளை ஆயக்கட்டுதாரா்கள் மூலம் நடத்தக்கோரும் வழக்கில், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:12 pm

DIN

சிவகங்கை மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகளை ஆயக்கட்டுதாரா்கள் மூலம் நடத்தக்கோரும் வழக்கில், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சின்னய்யா தாக்கல் செய்த மனு:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள புன்னங்குடி கிராமத்தில் 3 கண்மாய்களை தூா்வாரவும், மேம்படுத்தவும் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் ஆயகட்டுத்தாரா்கள் மூலம் நடைபெற வேண்டும். ஆனால் தண்ணீா் பயன்பாட்டுக் கூட்டமைப்பு மூலமாக நடந்து வருகிறது. இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே புன்னங்குடி கிராமத்தில் உள்ள 3 கண்மாய்களில் ஆயக்கட்டுத்தாரா்கள் மூலம் குடிமராமத்துச் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.