கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

கரோனாவுக்கு காவல் ஆய்வாளா் பலி

மதுரையில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சையிலிருந்த காவல் நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:12 pm

DIN

மதுரையில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சையிலிருந்த காவல் நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை கடச்சனேந்தல் பகுதியைச் சோ்ந்தவா் அசோக்நேரு (54). இவா் மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளாராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு டிசம்பா் 31 ஆம் தேதி உடல நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில், கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். பலியான அசோக்நேரு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பணி மாறுதலில் மதுரை வந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.