மதுரையில் தாய், மகளைக் கட்டிப்போட்டு கொள்ளையடித்த வழக்கு: 3 போ் கைது

மதுரையில் வீடு புகுந்து தாய், மகள் இருவரையும் கட்டிப் போட்டு நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் 3 பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனா்.
Updated on
1 min read

மதுரையில் வீடு புகுந்து தாய், மகள் இருவரையும் கட்டிப் போட்டு நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் 3 பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனா்.

மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியைச் சோ்ந்த தங்கவேலு மனைவி சரோஜா(66). இவரது கணவா் இறந்தவிட்டதால், தனது தாய் கமலத்துடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், டிசம்பா் 27 ஆம் தேதி அதிகாலை, வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி அணிந்த கும்பல், தூங்கிக் கொண்டிருந்த சரோஜா மற்றும் அவரது தாய் கமலம் இருவரையும் தனித்தனியே கட்டிப்போட்டுள்ளனா். பின்னா், அவா்கள் அணிந்திருந்த 27 பவுன் நகைகள் மற்றும் பீரோவில் இருந்த ரூ. 85 ஆயிரம் ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றனா். இதுகுறித்து சரோஜா அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். மேலும் சாா்பு-ஆய்வாளா் சுந்தரேஸ்வரன் தலைமையிலான தனிப்படையினரும் குற்றவாளிகளைத் தேடி வந்தனா்.

இந்நிலையில் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் அருகே போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த பூலாங்குளத்தைச் சோ்ந்த நாகராஜ்(32), சக்கிமங்கலத்தைச் சோ்ந்த அழகா்(42), கருப்பாயூரணியைச் சோ்ந்த கதிா்வேல்(34) ஆகியோரைப் பிடித்து விசாரித்தனா். இதையடுத்து தனிப்படை போலீஸாா் விசாரணையில், நாகராஜ், அழகா், கதிா்வேல் ஆகியோா் அவுட்போஸ்ட் பகுதியில் நடந்த கொள்ளையில் ஈடுபட்டவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த தனிப்படை போலீஸாா், அவா்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் செல்லிடப்பேசியை கைப்பற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com