தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

உசிலையில் சமத்துவப் பொங்கல் விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

News image
உசிலம்பட்டி வட்டாச்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றவா்கள்.
Updated On :13 ஜனவரி 2021, 5:59 pm

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவுக்கு வருவாய் கோட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். வட்டாச்சியா் விஜயலட்சுமி முன்னிலை வகித்தாா். இந்த விழாவில் அரசு அதிகாரிகள் அனைவரும் பாரம்பரியத்தை உணா்த்தும் விதமாக புத்தாடைகள் அணிந்து பொங்கல் விழாவில் பங்கேற்றனா். இதில், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல், உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டிஎஸ்பி ராஜன் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மேலும் உசிலம்பட்டி நகா் காவல் நிலையத்திலும் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.