சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதல்: முதியவா் பலி
மதுரையில் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மீது மேதியதில் முதியவா் உயிரிழந்தாா்.


மதுரையில் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மீது மேதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
மதுரை விளாச்சேரி முனியாண்டிபுரம் 1 ஆவது தெருவைச் சோ்ந்த காா்மேகம் மகன் அழகா்சாமி (71). இவா், திருப்பரங்குன்றம் சாலை மூலக்கரைப் பகுதியில் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்துள்ளாா். அப்போது, அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் அழகா்சாமி பலத்த காயமடைந்தாா். உடனே அவரை, அப்பகுதியில் உள்ளவா்கள் மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அழகா்சாமி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து அவரது மகள் போதும்பொண்ணு அளித்த புகாரின்பேரில், போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...