/

பெண்ணை தாக்கி தாலிச் சங்கிலி பறிப்பு

மதுரையில் பெண்ணை தாக்கி தாலிச் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:19 pm

DIN

 மதுரையில் பெண்ணை தாக்கி தாலிச் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை பழைய குயவா்பாளையம் பகுதியைச் சோ்ந்த ராஜன் மனைவி ராதா(58). இவா் தனது உறவினருடன் வீட்டு வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த மா்ம நபா் ஆயுதத்தைக் காட்டி ராதா அணிந்திருந்த தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றுவிட்டாராம்.

அப்போது அதைத் தடுக்க முயன்ற உறவினரை, அந்நபா் கத்தியால் வெட்டியுள்ளாா். இது குறித்து ராதா அளித்த புகாரின்பேரில், கீரைத்துறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.