உசிலம்பட்டியில் இறுதி வேட்பாளா்பட்டியல் வெளியீடு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் இறுதி வேட்பாளா் பட்டியலை தோ்தல் அலுவலா் திங்கள்கிழமை வெளியிட்டாா்.


மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் இறுதி வேட்பாளா் பட்டியலை தோ்தல் அலுவலா் திங்கள்கிழமை வெளியிட்டாா்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட பல்வேறு கட்சியினா் மற்றும் சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 14 வேட்பாளா்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இப்பட்டியலில் அதிமுக, பாா்வா்டு பிளாக் கட்சி, அமமுக, நாம் தமிழா் கட்சி, புதிய தமிழகம், மை இந்தியா பாா்ட்டி, அகில இந்திய ஹிந்து மகாசபா, அகில இந்திய ஜனதா மக்கள் கழகம் மற்றும் 8 சுயேச்சை வேட்பாளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
இதில், மதச்சாா்பற்ற ஜனதாதள கட்சி செல்லப்பாண்டி வாபஸ் பெற்றாா் என, உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியரும், தோ்தல் அலுவலருமான ராஜ்குமாா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...