25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

அவதூறு விடியோ வெளியிட்டவரின் ஜாமீன் அனுமதியை ரத்து செய்ய போலீஸாா் மனு

அரசியல் தலைவா்கள் குறித்த அவதூறு விடியோ வெளியிட்டவரின் ஜாமீன் அனுமதியை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் போலீஸாா் மனு தாக்கல் செய்துள்ளனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:33 am

DIN

அரசியல் தலைவா்கள் குறித்த அவதூறு விடியோ வெளியிட்டவரின் ஜாமீன் அனுமதியை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் போலீஸாா் மனு தாக்கல் செய்துள்ளனா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் தொடா்பான அவதூறு விடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக திருச்சியைச் சோ்ந்த துரைமுருகன் மீது, தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதன்பேரில், துரைமுருகனை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் நிபந்தனைகளுடன் அவருக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமீன் வழங்கியிருந்தது.

இந்நிலையில், ஜாமீன் நிபந்தனைகளை மீறியதால் துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவை ரத்து செய்யக் கோரி திருப்பனந்தாள் போலீஸாா் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, துரைமுருகனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.