25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

அண்ணா பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை, போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை அகற்றினா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:27 am

DIN

 மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை, போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை அகற்றினா்.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புக் கடைகள், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன் உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து, மண்டலவாரியாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மதுரை அண்ணா பேருந்து நிலையப் பகுதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு மற்றும் கடைகளின் முகப்புகள் ஆக்கிரமிப்பு போன்றவை குறித்த புகாரின்பேரில், மாநகராட்சி அதிகாரிகள் அண்ணா பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றினா். இதில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் 10-க்கும் மேற்பட்ட கடைகளின் முகப்புகள் மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றுவதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.