எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்
மதுரை மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில், ஏழை மக்களுக்கான இலவச ஆம்புலன்ஸ் சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.


மதுரை மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில், ஏழை மக்களுக்கான இலவச ஆம்புலன்ஸ் சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
இதற்கான தொடக்க விழா, மதுரை தனியாா் விடுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மதுரை மாவட்டத் தலைவா் முஜிபுா் ரகுமான் தலைமை வகித்தாா். எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக், ஆம்புலன்ஸ் வாகன சேவையை தொடக்கி வைத்தாா்.
இதில், பாப்புலா் ப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினா் யூசுப், மதுரை ஐடியாஸ் மையத்தின் இயக்குநா் அருட்தந்தை பால் மைக்கேல் ராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலா் கனியமுதன், இமாம் கவுன்சில் மதுரை மாவட்டத் தலைவா் அப்துல்லா ஷா ஆதி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று வாழ்த்திப் பேசினா். முன்னதாக, மாவட்டப் பொதுச் செயலா் சாகுல் ஹமீது வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...