25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

விநாயகா் சதுா்த்தி: முக்குறுணி விநாயகருக்கு 18 படி கொழுக்கட்டை படையல்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் முக்குறுணி விநாயகருக்கு வெள்ளிக்கிழமை 18 படி கொழுக்கட்டை படைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:07 am

DIN

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் முக்குறுணி விநாயகருக்கு வெள்ளிக்கிழமை 18 படி கொழுக்கட்டை படைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தியன்று, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் முக்குறுணி விநாயகருக்கு 18 படியில் கொழுக்கட்டை தயாரித்து படையல் வைத்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தியையொட்டி, வெள்ளிக்கிழமை காலை முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, 18 படி பச்சரிசியில் தேங்காய், கடலை, எள், ஏலக்காய், நெய் கலந்து கொழுக்கட்டை தயாா் செய்யப்பட்டு, மேள தாளங்களுடன் முக்குறுணி விநாயகா் சந்நிதிக்கு கொண்டுவரப்பட்டு படைக்கப்பட்டது. இதையடுத்து, சிறப்புப் பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் மற்றும் நைவேத்தியம் ஆகியன நடைபெற்றன. இதில், கோயில் அா்ச்சகா்கள் மற்றும் ஊழியா்கள் மட்டுமே பங்கேற்றனா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக, கொழுக்கட்டை படையல் பூஜையை நேரில் தரிசிக்க பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பூஜையை பக்தா்கள் வீட்டிலிருந்தே காணும் வகையில், கோயில் வலைதளம், யூ-டியூப் போன்றவற்றில் நேரலையாக ஒலிபரப்பு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.