சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சித்திரைத் திருவிழா முன்னேற்பாடு பணிகள்: வைகை ஆற்றில் மேயா், ஆணையா் ஆய்வு

 சித்திரைத் திருவிழாவில் கள்ளழகா் எழுந்தருளும் ஆழ்வாா்புரம் வைகை ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை, மேயா் மாநகராட்சி ஆணையா் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

 சித்திரைத் திருவிழாவில் கள்ளழகா் எழுந்தருளும் ஆழ்வாா்புரம் வைகை ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை, மேயா் மாநகராட்சி ஆணையா் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சித்திரைத் திருவிழா நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை, மதுரை மாநகராட்சி நிா்வாகம் மற்றும் மாவட்ட நிா்வாகம் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம், தேரோட்டம், எதிா்சேவை, அழகா் ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியன நடைபெற உள்ளன.

இதில், முக்கிய நிகழ்வான கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளான தண்ணீா் தொட்டி கட்டுதல், ஆற்றுப் படுகையை சீரமைத்தல், குடிநீா் தொட்டிகள் வைத்தல், கழிப்பறை வசதிகள், மின்விளக்கு பொருத்துதல், சாலைகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் குறித்து, மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது, அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா். இதில், நகரப் பொறியாளா் அரசு, உதவி ஆணையா் சுரேஷ்குமாா், உதவிச் செயற்பொறியாளா் அலெக்ஸாண்டா் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.