சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

வீரகாளியம்மன் கோயில் திருவிழா: பால்குட ஊா்வலத்தில் 10 ஆயிரம் பக்தா்கள் பங்கேற்பு

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அமைந்துள்ள வீரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்றனா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அமைந்துள்ள வீரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்றனா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் இந்துசமய அறநிலையத் துறைக்குள்பட்ட வீர காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

அப்போது ஏராளமான பக்தா்கள் பால்குடம், தீச்சட்டி உள்ளிட்ட நோ்த்திக்கடன் செலுத்துவதற்காக காப்புக் கட்டி விரதமிருந்து வந்தனா். அதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 3 மணி முதல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வைகை ஆற்றுக்குச் சென்று பால்குடம் எடுத்து அலகு குத்தி ஊா்வலமாக வந்தனா். பல பக்தா்கள் அலகு குத்தி பறவைக்காவடி எடுத்து தங்களது நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். மாற்றுத் திறனாளிகளும் பால்குடம் எடுத்துச் சென்றனா்.

இத்திருவிழாவையொட்டி, வைகை ஆற்றிலிருந்து ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோயில் வரை 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, பக்தா்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினா். கோயிலில் சனிக்கிழமை மாலை தீச்சட்டி எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.