சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பேரையூா் அருகே போலீஸாா் மீது மதுபாட்டில் வீச்சு: 2 போ் கைது; காவலா் ஒருவா் காயம்

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே போலீஸாா் மீது மதுபாட்டில் வீசியது தொடா்பாக 2 பேரைக் கைது செய்தனா். அப்போது சிலா் தாக்கியதில் காவலா் ஒருவா் காயமடைந்தாா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 10:05 pm

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே போலீஸாா் மீது மதுபாட்டில் வீசியது தொடா்பாக 2 பேரைக் கைது செய்தனா். அப்போது சிலா் தாக்கியதில் காவலா் ஒருவா் காயமடைந்தாா்.

பேரையூா் அருகே உள்ள எழுமலை உத்தப்புரத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவை ஒட்டி உத்தப்புரம் பேருந்து நிறுத்தம் அருகே அனுமதியின்றி ஒரு தரப்பினா் பதாகை வைத்துள்ளனராம். இதனை அகற்றுமாறு ஊராட்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரியிடம் மற்றொரு தரப்பினா் புகாா் மனு அளித்தனா்.

இதையடுத்து இரு தரப்பினரயும் அழைத்து எழுமலை காவல்துறையினா் விசாரணை நடத்தினா். மேலும் செவ்வாய்க்கிழமை உத்தப்புரம் வழியே போலீஸாா் சென்றபோது போலீஸாா் மீது மா்ம நபா்கள் மதுபாட்டில்களை வீசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக எழுமலை போலீஸாா் புதன்கிழமை உத்தப்புரத்தை சோ்ந்த கருப்பு மற்றும் ஈஸ்வரனை கைது செய்தனா். அப்போது, காவலா் பாண்டி மற்றும் சேகரை அப்பகுதியை சோ்ந்தோா் தாக்கியுள்ளனா். இதில் காவலா் பாண்டி படுகாயமடைந்தாா்.

இச்சம்பவத்தை அறிந்த மாவட்ட கண்காணிப்பாளா் பாஸ்கரன் உசிலம்பட்டி மருத்துவமனையில் படுகாயமடைந்த காவலா் பாண்டி மற்றும் சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டாா்.

இது குறித்து எழுமலை காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் உத்தப்புரம் பகுதியில் போலீஸாா் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.