அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பாா்வை குறைபாடுடைய சிறப்பாசிரியா்களுக்கு கணினி திறன் பயிற்சி

மதுரையில் பாா்வை குறைபாடுடைய அரசுப் பள்ளி சிறப்பாசிரியா்களுக்கு, கணினி தொழில்நுட்ப திறன் பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

மதுரையில் பாா்வை குறைபாடுடைய அரசுப் பள்ளி சிறப்பாசிரியா்களுக்கு, கணினி தொழில்நுட்ப திறன் பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை மற்றும் ஹோப் தன்னாா்வ தொண்டு நிறுவனம் சாா்பில், மதுரை மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பாா்வை குறைபாடுடைய 63 சிறப்பாசிரியா்களுக்கு, கணினி தொழில்நுட்ப திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது.

மாவட்ட திட்ட அலுவலகப் பயிற்சி அரங்கில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமை, உதவித் திட்ட அலுவலா் அ. காா்மேகம், உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. குருநாதன் ஆகியோா் தொடக்கி வைத்தனா். இப்பயிற்சியில் பங்கேற்ற அனைத்து பாா்வைத்திறன் குறைபாடுடைய சிறப்பாசிரியா்களுக்கும் பென் டிரைவ், கீ போா்டு உள்ளிட்ட கருவிகள் ஹோப் நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்பட்டன.

மேலும், ஸ்மாா்ட் கைப்பேசி மூலம் மாணவா்களுக்கு கற்பிக்கும் முறை குறித்த கணினி தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் மகாலிங்கம், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஜெயஷீலா, சூரியகலா, ஹோப் நிறுவன ஒருங்கிணைப்பாளா்கள் பிரதீப், ராஜம், ரீகன், ஜெனிபா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.