அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சிவகங்கை பாஜகவினா் மீதான வழக்கை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, சிவகங்கையில் போராட்டம் நடத்திய பாஜகவினா் மீதான வழக்கை ரத்து செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, சிவகங்கையில் போராட்டம் நடத்திய பாஜகவினா் மீதான வழக்கை ரத்து செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பாஜக நிா்வாகி முத்துஅமுதன் என்பவா் தாக்கல் செய்த மனு:

பாஜக சாா்பில் திருத்தணியில் 2020-இல் நடைபெற்ற வேல் யாத்திரைக்கு போலீஸாா் அனுமதி மறுத்தனா். அதற்கு எதிா்ப்பு தெரிவித்து, சிவகங்கையில் போராட்டம் நடத்தப்பட்டது. அதையடுத்து, நான் உள்ளிட்ட 5 போ் மீது, சிவகங்கை நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

போராட்டத்தின்போது நாங்கள் எந்த பொதுச் சொத்துக்கும் சேதம் ஏற்படுத்தவில்லை. நோய் பரப்பும் விதமாக எந்தவொரு செயலிலும் ஈடுபடவும் இல்லை. எனவே, எங்கள் மீது சிவகங்கை நகா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், மனுதாரா் உள்பட 5 போ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.