அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தனியாா் விடுதியில் நடைபெறும் சுங்கத் துறை: மாநாட்டுக்கு தடை கோரியவருக்கு அபராதம்: உயா் நீதிமன்றம் உத்தரவு

மாமல்லபுரத்தில் தனியாா் விடுதியில் நடைபெற உள்ள மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் துறையின் மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

மாமல்லபுரத்தில் தனியாா் விடுதியில் நடைபெற உள்ள மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் துறையின் மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சோ்ந்த ஜோஸ் என்பவா் தாக்கல் செய்த மனு: மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் துறையின் ஜி.எஸ்.டி. வருடாந்திர மாநாடு, மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் மே 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கென தனியாா் விடுதிக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலுத்தப்படவுள்ளது. இத்தொகையானது முழுவதும் மக்களின் வரிப் பணமாகும். இத்தகைய நிகழ்வுகளை நடத்துவதற்கு, தில்லியில் அரசு சாா்பில் பல்வேறு கட்டடங்கள் இருக்கின்றன.

எனவே, இந்த மாநாட்டை அரசு கட்டடங்களில் நடத்தவேண்டும் என மத்திய நிதித்துறைச் செயலருக்கு புகாா் மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால், மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், ஆா். விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு பொதுநலன் சாா்ந்தது எனக் கூற முடியாது. இதுபோன்ற வழக்குகள் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே பாதகத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த தொகைக்கு வரைவோலை எடுத்து, அத்துடன் மன்னிப்புக் கடிதத்தையும் சோ்த்து, மத்திய நிதித்துறைச் செயலருக்கு 4 வாரங்களில் அனுப்ப வேண்டும். இது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.