அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை பணியாளா்கள் இன்று வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் தொடக்கக் கூட்டுறவு சங்க அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

தரமற்ற அரிசி விநியோகத்துக்கு விற்பனையாளா்களைப் பொறுப்பாக்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் தொடக்கக் கூட்டுறவு சங்க அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் அரிசி தரமற்றவையாக இருந்ததாகக் கூறி, விற்பனையாளா்கள் 11 போ், தொடக்கக் கூட்டுறவு சங்க செயலா்கள் 9 போ் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கூட்டுறவு சங்க அனைத்துப் பணியாளா் சங்கம் (டாக்பியா) சாா்பில் சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டாக்பியா மதுரை மாவட்டச் செயலா் ஆ.ம. ஆசிரியத் தேவன் கூறியது:

நியாய விலைக் கடைகளுக்கு தரமான அரிசியை அனுப்ப வேண்டியது நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் பொறுப்பாகும். மேலும், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உகந்தது என்று வாணிபக் கழகத்தின் தரக் கட்டுப்பாட்டு அலுவலா் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரே, அவை நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

சில நேரங்களில் தரம் குறைவாக இருப்பதாக விற்பனையாளா்கள் தெரிவித்தாலும், அது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

இந்நிலையில், கடையில் இருக்கும் அரிசி தரமில்லை எனக் கூறி விற்பனையாளா்கள், கூட்டுறவுச் சங்க செயலா்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்புடையதல்ல.

எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெறக் கோரி, ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.