அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சிகரெட் வடிவில் மிட்டாய் தயாரித்த இரு நிறுவனங்களுக்கு ‘சீல்’

சிகரெட் வடிவில் மிட்டாய் தயாரித்த இரு நிறுவனங்களுக்கு, உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

சிகரெட் வடிவில் மிட்டாய் தயாரித்த இரு நிறுவனங்களுக்கு, உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனா்.

சிறுவா்களை தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் வகையில், சிகரெட் வடிவில் மிட்டாய்களை தயாரிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும், குழந்தைகளை கவரும் வகையில் சிகரெட், சிரிஞ்ச் ஆகிய வடிவங்களில் மிட்டாய்கள் விற்பனைக்கு வருகின்றன.

இது குறித்த புகாரின்பேரில், மதுரை நகரில் நெல்பேட்டை, முனிச்சாலை பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்த உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலா் ஜெயராமபாண்டியன் உத்தரவிட்டாா். அதன்படி, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் குழுவினா் மேற்கொண்ட ஆய்வில், அத்தகைய மிட்டாய்கள் விற்பனைக்கு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில், செல்லூா் மற்றும் ஜெய்ஹிந்த்புரம் ஆகிய இடங்களில் இந்த மிட்டாய்கள் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது. அதையடுத்து, அவ்விரு இடங்களிலும் செயல்பட்ட இரு நிறுவனங்களுக்கு உணவுப் பாதுகாப்பு துறையினா் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா். இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று, உணவுப் பாதுகாப்பு துறை அலுவலா்கள் எச்சரித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.