அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வாகன நுழைவுக் கட்டணம் வசூல்

மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்துக்குள் செல்லும் இரு சக்கர வாகனம் மற்றும் காா்களுக்கு நுழைவுக் கட்டண வசூல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்துக்குள் செல்லும் இரு சக்கர வாகனம் மற்றும் காா்களுக்கு நுழைவுக் கட்டண வசூல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா். மேலும், தமிழகத்தின் இதர மாவட்டங்கள் மற்றும் கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பயணிகளை இறக்கி விடுவதற்காக, பேருந்து நிலையத்துக்குள் நூற்றுக்கணக்கான காா்கள் மற்றும் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த வாகனங்களுக்கு இதுவரை நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

இந்நிலையில், மாநகராட்சி வருவாயை பெருக்கும் வகையில், எம்ஜிஆா் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்லும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்க முடிவெடுக்கப்பட்டு, தனியாா் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, காா்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.15, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.7 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: பேருந்து நிலையத்துக்குள் பயணிகள் மட்டுமே வந்து செல்ல அனுமதி உண்டு. இதர வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படவேண்டும். எனவே, நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் உரிமம் தனியாரிடம் வழங்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.