சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பேரையூா் அருகே கிராம மக்கள் சாலை மறியல்

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே புதிய சாலை அமைக்க கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே புதிய சாலை அமைக்க கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பேரையூா் அருகேயுள்ள பி.ஆண்டிபட்டி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பேரையூா் பெரிய கண்மாய் அருகில் உள்ள இந்த கிராமத்துக்கு, கண்மாய் மேல் அமைக்கப்பட்டுள்ள சாலையில்தான் சென்றுவர வேண்டும்.

இந்த சாலை அமைத்து 4 ஆண்டுகளாகும் நிலையில், தற்போது குண்டும் குழியுமாக உள்ளது. மேலும், சில நாள்களுக்கு முன் கேபிள் பதிப்பதற்காக தோண்டப்பட்டுள்ளது. இதனால், தற்போது பெய்துவரும் மழைக்கு சாலை சகதியாக மாறி, கிராம மக்கள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, புதிய சாலை அமைத்து தருமாறு டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்துக்கு கிராம மக்கள் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், பி.ஆண்டிப்பட்டி கிராம மக்கள் பேரையூா்- டி.கல்லுப்பட்டி சாலையில் வெள்ளிக்கிழமை காலை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த பேரையூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் இலக்கியா மற்றும் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையா் சிவசங்கரநாராயணன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததை அடுத்து, அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.