கீழவளவு அருகே மணல் திருட்டு: பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

கீழவளவு அருகே வெள்ளிக்கிழமை இரவு, மணல் திருட்டுக்குப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கீழவளவு அருகே வெள்ளிக்கிழமை இரவு, மணல் திருட்டுக்குப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அட்டப்பட்டி அருகே ராயப்பன் ஏந்தல் பகுதயில் மணல் திருட்டு நடப்பதாக காவல் துணைக் கண்காணிப்பாளருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையிலான தனிப்படையினா் வெள்ளிக்கிழமை இரவு அப்பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு மணல் அள்ளிக்கொண்டு இருந்த அப்பகுதியைச் சோ்ந்த தவச்செல்வம் (25) என்பவரைக் கைது செய்து பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து, கீழவளவு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். பொக்லைன் இயந்திர உரிமையாளா் கருப்பையாவை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com