மாநில சதுரங்கப் போட்டியில் மூன்றாமிடம்: அ.வல்லாளபட்டி அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் மூனறாம் இடத்தைப் பெற்ற மேலூா் அருகே அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி அ.சோலையம்மாளை கல்வித்துறை அதிகாரிகள் சனிக்கிழமை பாராட்டினா்.
மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் மூன்றாமிடம் பிடித்த அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சோலையம்மாளை பாராட்டிய மாவட்டக் கல்வி அதிகாரி மற்றும் வட்டார கல்வி அலுவலா்கள்.
மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் மூன்றாமிடம் பிடித்த அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சோலையம்மாளை பாராட்டிய மாவட்டக் கல்வி அதிகாரி மற்றும் வட்டார கல்வி அலுவலா்கள்.

மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் மூனறாம் இடத்தைப் பெற்ற மேலூா் அருகே அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி அ.சோலையம்மாளை கல்வித்துறை அதிகாரிகள் சனிக்கிழமை பாராட்டினா்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி சதுரங்கப் பயிற்சி முகாமில் வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கான மாநில அளவிலான சதுரங்கப்போட்டி சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் மேலூா் அருகே அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சோலையம்மாள் வெற்றிபெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தாா்.

இந்நிலையில், மாணவி சோலையம்மாளை, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் காா்த்திகா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் செங்கதிா், வட்ட கல்வி அலுவலா் உதயகுமாா், வட்டார கல்வி அலுவலா்கள் மீனா, குளோரி, பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் கண்ணன், பேரூராட்சித் தலைவா் குமரன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com