மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளைஞா் ஒருவா் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
டி.கல்லுப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்குள்ள பல் சிகிச்சை பிரிவில் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா ஆயால்பட்டியைச் சோ்ந்த ராமா்பாண்டி மகன் பால்ராஜ்(39) என்பவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து வந்த டி.கல்லுப்பட்டி போலீஸாா் பால்ராஜ் சடலத்தை மீட்டு மருத்துவப் பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மருத்துவா் பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.