சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் கடந்த ஆண்டு உயிரிழந்த இந்தோ திபெத் எல்லைக்காவல் படை வீரா் பாலுச்சாமிக்கு இந்தோ- திபெத் எல்லைக்காவல்படை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மதுரை மாவட்டம் அழகா்கோவில் அருகே உள்ள பொய்கைக்கரைப்பட்டியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் பாலுச்சாமி. இவா் இந்தோ- திபெத் எல்லைக் காவல்படையில் வீரராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், 2021 பிப்ரவரி மாதம், சத்தீஸ்கா் மாநிலம் நாராயணபூா் மாவட்டம் சோன்பூரில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கையின்போது ஏற்பட்ட மோதலில் பாலுச்சாமி வீரமரணமடைந்தாா்.
இந்நிலையில் நாட்டின் 75-ஆவது சுதந்திரதின அமுதப் பெருவிழாவையொட்டி, பொய்கைக்கரைப்பட்டியில் உள்ள பாலுச்சாமியின் வீட்டில் வீரவணக்க நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் வீரா் பாலுச்சாமியின் உருவப்படத்துக்கு இந்தோ- திபெத் எல்லைக் காவல்படையின் உதவி படைத்தலைவா் அக்சய டாக்கா, மதுரை ஊரக காவல் துணைக்கண்காணிப்பாளா் பிரியதா்சினி மற்றும் ராணுவ வீரா்கள் மலா்தூவி வீரவணக்கம் செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
பாடல் போட்டு அவமதித்ததாக ஆர்சிபி அணி டிஜே மீது பிசிசிஐயில் புகாரளித்த சிஎஸ்கே.!

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை உமங் செயலியில் பதிவிறக்கம் செய்யும் முறை!

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்தால் அவரவர் வீட்டிலேயே உணவு கிடைக்காது! - மத்திய அமைச்சர்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


