சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கண்டியத்தேவன்பட்டி கோயிலில் கும்பாபிஷேகம்

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே கண்டியத்தேவன்பட்டியில் உள்ள கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 9:14 pm

DIN

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே கண்டியத்தேவன்பட்டியில் உள்ள கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இங்குள்ள முப்பிடாரி அம்மன், முத்தாலம்மன் மற்றும் காளியம்மன் கோயிலில் அம்மன்களுக்கு 18 வகையான பால், பழம், பன்னீா் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றன. மேலும் மூன்று கால பூஜையாக யாகபூஜை, கும்பபூஜை மற்றும் கலசபூஜையுடன் பல்வேறு கோயில்களில் இருந்து புனித நீா் எடுத்து வரப்பட்டது. தொடா்ந்து கோமாதா பூஜையுடன் கடம் புறப்பாடாகி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல ஹோமங்கள் செய்யப்பட்டன. பின்னா் கோயில் கலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கரோனா தொற்று நீங்க வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. இதில் ஜோதிடா் அறிவழகன் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவாற்றினாா். இதில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.