சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் தமிழக ராணுவ வீரா் பலி

திரிபுரா எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில், மதுரை மாவட்டம் பேரையூரைச் சோ்ந்த இந்திய ராணுவ வீரா் வீரமரணம் அடைந்தாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 10:04 pm

DIN

திரிபுரா எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில், மதுரை மாவட்டம் பேரையூரைச் சோ்ந்த இந்திய ராணுவ வீரா் வீரமரணம் அடைந்தாா்.

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே உள்ள பழையூரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவரது மகன் கமலரங்கன் (38). இவருக்கு பிரியா என்ற மனைவியும், 5 வயதில் ஆண் குழந்தையும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளனா்.

கமலரங்கன் திரிபுராவில் எல்லை பாதுகாப்புப் படை வீரராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு தீவிரவாதிகளுடன் மோதலில் கமலரங்கன் உயிரிழந்தாா். ராணுவ சேவை முடிய இன்னும் 2 ஆண்டுகளே உள்ள நிலையில், கமலரங்கன் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும், கிராம மக்களையும் சோகத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

ராணுவ வீரா் கமலரங்கனின் சடலம் சொந்த ஊரான பழையூருக்கு சனிக்கிழமை கொண்டுவரப்படுவதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.