புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உசிலம்பட்டியில் ஆா்ப்பாட்டம்

உசிலம்பட்டியில் அரசாணை 40-ஐ ரத்து செய்யக் கோரி, தமிழ் மாநில பிரமலைக் கள்ளா் முற்போக்கு இளைஞா் பேரவை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

News image
Updated On :1 ஜூலை 2022, 5:27 pm

DIN

உசிலம்பட்டியில் அரசாணை 40-ஐ ரத்து செய்யக் கோரி, தமிழ் மாநில பிரமலைக் கள்ளா் முற்போக்கு இளைஞா் பேரவை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் 295 கள்ளா் சீரமைப்புப் பள்ளிகள், 54 கள்ளா் சீரமைப்பு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கள்ளா் சீரமைப்புத் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு, தமிழக அரசு அரசானை 40-ஐ 2022 இல் வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவா் சிலை வளாகத்தில், தமிழ் மாநில பிரமலைக் கள்ளா் முற்போக்கு இளைஞா் பேரவை சாா்பில், அதன் மாநிலத் தலைவா் ராஜபாண்டியன் தலைமையிலும், மாநில இணைச் செயலா் சௌந்திரபாண்டியன் முன்னிலையிலும் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை 40-2022 ஐ ரத்து செய்யக் கோரி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் பாண்டி, மாவட்டச் செயலா் அசோக், மாவட்ட மாணவரணி தினேஷ், செல்லம்பட்டி ஒன்றியத் தலைவா் மலைச்சாமி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.