ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஆடி அமாவாசை திருவிழா: சதுரகிரி மலைக்குச் செல்ல காலை 5 முதல் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதி

 ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைக்குச் செல்வதற்கு காலை 5 முதல் மாலை 3 மணிவரை மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

DIN

 ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைக்குச் செல்வதற்கு காலை 5 முதல் மாலை 3 மணிவரை மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசையையொட்டி இக்கோயிலுக்கு வரும் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவது தொடா்பாக, மதுரை மற்றும் விருதுநகா் மாவட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் (மதுரை), ஜெ.மேகநாதரெட்டி (விருதுநகா்), மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சிவபிரசாத் மற்றும் இரு மாவட்டங்களின் வருவாய்த் துறை, இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறை, தீயணைப்புத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் ஆட்சியா்கள் அனீஷ்சேகா், மேகநாதரெட்டி ஆகியோா் கூறியது:

ஆடி அமாவாசை திருவிழா நிகழ் ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஜூலை 26 முதல் 29 ஆம் தேதி வரை பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். நிகழ் ஆண்டு லட்சக்கணக்கான பக்தா்கள் வருகை தருவா் என்பதால் மேற்குறிப்பிட்ட நாள்களில் காலை 5 மணி முதல் மாலை 3 மணிவரை மலை மீது ஏறி இறங்க அனுமதிக்கப்படுவா்.

சதுரகிரி மலையடிவாரமான தாணிப்பாறையிலிருந்து சுமாா் 500 மீட்டா் தொலைவில், 15 ஏக்கரில் வாகன நிறுத்தும் இடம் தயாா் செய்யப்பட்டுள்ளது. மேலும், தாணிப்பாறை மலையடிவாரத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. இங்கிருந்து தாணிப்பாறை மலையடிவாரத்திற்கு பக்தா்கள் சென்றுவர குறுகிய தூரப் பேருந்துகள் இயக்கப்படும். இந்தப் பேருந்துகள் சென்று திரும்ப தனித்தனி பாதை வசதி அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை மற்றும் விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்த 2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

வாக்கி டாக்கி, வில்போன், ஹாம் ரேடியோ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவசர ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.