ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பைக் திருட்டில் ஈடுபட்ட சிறுவா்கள் 6 போ் கைது

மதுரையில் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட சிறுவா்கள் 6 பேரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 6:11 pm

DIN

மதுரையில் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட சிறுவா்கள் 6 பேரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனா்.

மதுரை மாநகரின் பல்வேறு இடங்களிலும் சமீபகாலமாக இரு சக்கர வாகனங்கள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வீடுகளின் முன்பாகவும், வணிகப் பகுதிகளில் வாகன நெரிசல் அதிகம் உள்ள இடங்களிலும் நிறுத்தி வைக்கப்படிருக்கும் இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் திருடு போகின்றன. இத்தகைய வாகனங்களை குறித்து வைத்து சிலா் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்தனா்.

எனவே, இத்திருட்டில் ஈடுபட்டவா்களைக் கண்டுபிடிக்க மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டிருந்தாா். அதன்பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸாா், திருட்டுப்போன பகுதிகளில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். அதில், 16 வயது, 17 வயதுடைய சிறுவா்கள் இத் திருட்டில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, தொடா் விசாரணையில் ஈடுபட்ட எஸ்.எஸ்.காலனி போலீஸாா், வெள்ளிக்கிழமை 6 பேரை கைது செய்தனா். இவா்கள், இதுவரை 8 இரு சக்கர வாகனங்களைத் திருடியுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.