குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

90's கிட்ஸ் பரிதாபம்: மதுரையில் சுவரொட்டிகள் மூலம் பெண் தேடும் இளைஞர்!

மதுரையில் மணப்பெண் தேவை என சுவரொட்டிகள் மூலம் பெண் தேடும் வாலிபரின் செயல் 90s கிட்ஸ் மத்தியில் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :22 ஜூன் 2022, 1:32 pm IST

மதுரை: மதுரையில் மணப்பெண் தேவை என சுவரொட்டிகள் மூலம் பெண் தேடும் வாலிபரின் செயல் 90s கிட்ஸ் மத்தியில் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story image

மதுரை: மதுரையில் உள்ள சுவர்களில் ஒட்டப்படும் அரசியல், சினிமா நடிகர்கள் குறித்தான சுவரொட்டிகள், பழிக்கு பழியாக வசனங்களில் திக்குமுக்காட வைக்கும் அளவிற்கு கிராபிக்ஸ் காட்சிகள் சித்தரிக்கப்படும் விளம்பர சுவரொட்டிகள் எப்போதும் பேசுபொருளாகி வருவது வழக்கம்.

Story image

இந்நிலையில் 90-களில் பிறந்த மதுரை வில்லாபுரம் அருகே மீனாட்சி நகரைச் சேர்ந்த 27 வயதுடைய ஜெகன் என்ற வாலிபர் ஒருவர் மாத வருமானமாக 40 ஆயிரம் சம்பாதிப்பதுடன் சொந்தமாக நிலமும் கொண்டிருந்த நிலையிலும் தனக்கு திருமணம் ஆகாத விரக்தியில், மதுரை மாநகர், புறநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுவர்களில் மணமகள் தேவை என விளம்பர சுவரொட்டி அடித்து பெண் தேடும் படலத்தை துவக்கி உள்ளார்.

Story image

ஏற்கனவே 2K கிட்ஸ் திருமணம் முடித்து குழந்தைகளுடன் வலம் வருவதால், பல 90’s கிட்ஸ்க்களுக்கு திருமணம் ஆகாமல் இருந்து வரும் நிலையில், தற்போது நூதனமுறையில் மணமகள் தேவை என்று இந்த வாலிபர் செயல் 90’s கிட்ஸ் மத்தியில் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.