சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

டி.கல்லுப்பட்டியில் மனைவி கொலை: கணவா் கைது

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் நடத்தை சந்தேகத்தில் மனைவியை வியாழக்கிழமை, கம்பியால் அடித்துக் கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:24 pm

DIN

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் நடத்தை சந்தேகத்தில் மனைவியை வியாழக்கிழமை, கம்பியால் அடித்துக் கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

டி.கல்லுப்பட்டி பி.ஆா். நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (44). இவரது மனைவி முருகாம்பாள் (40). இவா்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளாா்.

தம்பதி இருவரும் அப்பகுதியில் உள்ள தனியாா் மில்லில் பணியாற்றி வந்த நிலையில், கிருஷ்ணன் கடந்த ஓராண்டாக வேலைக்குச் செல்லவில்லையாம். இதற்கிடையில் முருகாம்பாளின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவா் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா். புதன்கிழமை இரவு மீண்டும் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த முருகாம்பாளின் தலையில், கிருஷ்ணன், கம்பியால் தாக்கி உள்ளாா். இதில், ரத்த வெள்ளத்தில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து டி.கல்லுப்பட்டி காவல்துறையினா் வழக்குப் பதிந்து கிருஷ்ணனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.