சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

மதுரை: மாநகராட்சி கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது திமுகவினர் தாக்குதல்

மதுரை மாநகராட்சிக்கான பட்ஜெட் கூட்ட தொடர் காலை 11.30மணிக்கு தொடங்கியது.

News image
Updated On :11 மே 2022, 10:45 am

மதுரை: மதுரை மாநகராட்சிக்கான பட்ஜெட் கூட்ட தொடர் காலை 11.30மணிக்கு தொடங்கியது. மேயர், ஆணையாளர் வருகை தராதநிலையில் இருக்கை ஒதுக்கீடு திமுக - அதிமுக உறுப்பினர்களுக்கான மாமன்ற கூட்டத்தில் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து தங்களுக்கான இருக்கை தொடர்பாக அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயரை சந்தித்து முறையிடுவதற்காக மேயர் அறைக்கு சென்றனர்.

அப்போது அதனை செய்தி சேகரிப்பதற்காக சென்ற செய்தியாளர்களை மேயர் அறை முன்பாக இருந்த திமுகவை சேர்ந்த ரெளவுடிகள் சிலர் திடிரென செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி கேமிராவை காலால் எட்டி உதைத்து உடைத்தனர்.

இதனையடுத்து திமுக ரெளவுடிகளின் அராஜக போக்கை கண்டித்து செய்தியாளர்கள் மேயர் அறை முன்பாக அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாநகராட்சி மேயர் அறையானது தொடர்பே இல்லாத ரெளவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், மேலும் திமுக  பெண் மாமன்ற உறுப்பினர்களின் கணவர், உறவினர்கள் முழுவதிலுமாக அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகவும் அனைத்துகட்சி மாமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களையும், திமுக மாமன்ற உறுப்பினர்கள் மிரட்டி தங்களது சொந்த பணிகளை செய்ய வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.