மதுரை: மதுரை மாநகராட்சிக்கான பட்ஜெட் கூட்ட தொடர் காலை 11.30மணிக்கு தொடங்கியது. மேயர், ஆணையாளர் வருகை தராதநிலையில் இருக்கை ஒதுக்கீடு திமுக - அதிமுக உறுப்பினர்களுக்கான மாமன்ற கூட்டத்தில் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து தங்களுக்கான இருக்கை தொடர்பாக அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயரை சந்தித்து முறையிடுவதற்காக மேயர் அறைக்கு சென்றனர்.
அப்போது அதனை செய்தி சேகரிப்பதற்காக சென்ற செய்தியாளர்களை மேயர் அறை முன்பாக இருந்த திமுகவை சேர்ந்த ரெளவுடிகள் சிலர் திடிரென செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி கேமிராவை காலால் எட்டி உதைத்து உடைத்தனர்.
இதனையடுத்து திமுக ரெளவுடிகளின் அராஜக போக்கை கண்டித்து செய்தியாளர்கள் மேயர் அறை முன்பாக அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாநகராட்சி மேயர் அறையானது தொடர்பே இல்லாத ரெளவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், மேலும் திமுக பெண் மாமன்ற உறுப்பினர்களின் கணவர், உறவினர்கள் முழுவதிலுமாக அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகவும் அனைத்துகட்சி மாமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களையும், திமுக மாமன்ற உறுப்பினர்கள் மிரட்டி தங்களது சொந்த பணிகளை செய்ய வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.