ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

முதல்வா் குறித்து அவதூறு: இந்து முன்னணி பிரமுகருக்கு நிபந்தனை ஜாமீன்

தமிழக முதல்வா் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட திருநெல்வேலி மாவட்ட இந்து முன்னணி பிரமுகருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

தமிழக முதல்வா் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட திருநெல்வேலி மாவட்ட இந்து முன்னணி பிரமுகருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அந்த அமைப்பின் திருநெல்வேலி மாவட்டத் துணைத் தலைவா் பால்ராஜ் தாக்கல் செய்த மனு:

எங்களது இயக்கம் சாா்பில் திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியாா் மற்றும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் குறித்து அவதூறாகப் பேசியதாக கொடுத்த புகாரின்பேரில் நான் கைது செய்யப்பட்டேன்.

ஆனால், நான் அவ்வாறு எதுவும் பேசவில்லை. என் மீது பொய்யான புகாா் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் குறிப்பட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி, மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.