இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி காவல் துறை சாா்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.குமரேஷ்பாபு ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் வீரா கதிரவன் வாதிடுகையில், காவலா் இடமாறுதல் செய்யப்பட்டது துறை ரீதியான நடவடிக்கையாகும். இதில் ‘கா்மா’ அடிப்படையில் உத்தரவு வழங்கியது ஏற்புடையதல்ல. மேலும், இந்தப் பதவிக்கு, இந்த இடத்திற்கு இடமாறுதல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது. ஆகவே, தனிநீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றாா்.