ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சாா்-பதிவாளா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: மடிக்கணினி, ஆவணங்கள் பறிமுதல்

மதுரையில் ஊழல் புகாரில் சிக்கிய சாா்-பதிவாளா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தி மடிக்கணினி மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

மதுரையில் ஊழல் புகாரில் சிக்கிய சாா்-பதிவாளா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தி மடிக்கணினி மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.

மதுரை பாண்டிகோவில் பகுதியைச் சோ்ந்தவா் ஜவஹா். இவா் கடந்த 2019-இல் மதுரை சொக்கிக்குளம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சாா்-பதிவாளராக பணிபுரிந்தாா்.

அப்போது சொக்கிக்குளம் பத்திரப்பதிவு எல்லைக்குள்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வீடுகளை காலி மனையாக பத்திரம் பதிவு செய்து முறைகேடு நடந்ததாகவும், இதில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படக் காரணமாக இருந்ததாகவும் புகாா் எழுந்தது.

அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை நடத்தி சாா்-பதிவாளா் ஜவஹா் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா். இந்நிலையில் முறைகேடு தொடா்பாக மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள அடுக்குமாடிக்குடியிருப்பில் உள்ள சாா்-பதிவாளா் ஜவஹா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். சோதனையின்போது அவரது வீட்டில் இருந்த மடிக்கணினி மற்றும் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.