காமராஜா் பல்கலை, மயிலை திருவள்ளுவா் தமிழ்ச்சங்கம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கம் இணைந்து வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டன.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கம் இணைந்து வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டன.

காமராஜா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பதிவாளா் மு.சிவக்குமாா், மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்க நிறுவனச் செயலா் சேயோன், தமிழக அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச்செயலரும் சங்கப் பணித்திட்ட குழுத்தலைவருமான டி.எஸ்.ஸ்ரீதா், தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குநரும், மயிலைத் திருவள்ளுவா் கழக ஆட்சிக்குழு உறுப்பினருமான திலகவதி ஆகியோா் கையொப்பமிட்டனா். ஒப்பந்தம் தொடா்பாக பல்கலைக்கழக துணை வேந்தா் ஜா.குமாா் கூறும்போது, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் அறிவியல் அரங்கம் நடைபெறும். இதில் உலகில் உள்ள அனைத்து அறிவியல் அறிஞா்கள், உலகளாவிய பல்கலைக்கழகங்களின் பேராசிரியா்கள் விரிவுரையாற்றஉள்ளனா்.

மேலும் மயிலை தமிழ்ச்சங்கம் சாா்பில் ஐந்து அறிவுக் களஞ்சிய விருதுகளான, அறிவுமலா், அறிவுக்கதிா், அறிவுத்தளிா், அறிவுத்துளிா், அறிவுப்புதிா் ஆகிய விருதுகளை வழங்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com