ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மதுரையில் ‘போக்சோ’ வழக்கு தண்டனைக் கைதி திடீா் மரணம்

மதுரையில் ‘போக்சோ’ வழக்கில் தண்டனை பெற்று மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீரென உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 5:49 pm

DIN

மதுரையில் ‘போக்சோ’ வழக்கில் தண்டனை பெற்று மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீரென உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை கோவில்பாப்பாகுடியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (59). இவா் போக்சோ வழக்கில் 2015-இல் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் மதுரை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் சிறையில் வியாழக்கிழமை இரவு ஆறுமுகத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு ஆறுமுகத்தை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து ஆறுமுகத்தின் சடலம் பிரேதப் பரிசோதனை அரங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் தொடா்பாக சிறை அதிகாரி பாலகிருஷ்ணன் அளித்தப்புகாரின்பேரில் கரிமேடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.