கடலூரில் பள்ளி மாடியிலிருந்து விழுந்து தோட்டக்காரர் சாவு

கடலூரில் பள்ளி மாடியிலிருந்து விழுந்து தோட்டக்காரர் உயிரிழந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடலூர்: கடலூரில் பள்ளி மாடியிலிருந்து விழுந்து தோட்டக்காரர் உயிரிழந்தார்.

கடலூர் அருகில் உள்ள சாத்தங்குப்பம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் சூ.திவ்யநாதன் (50). கடலூர் சொரக்கால் பட்டில் உள்ள புனித மரியாள் மேல்நிலைப்பள்ளியில் தோட்ட பராமரிப்பாளராக வேலை பார்த்து வந்தார். 

இன்று, மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது முதல் மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக, ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் உடல் கூறாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கடலூர் புதுநகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரது உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com