நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கடலூரில் பள்ளி மாடியிலிருந்து விழுந்து தோட்டக்காரர் சாவு

கடலூரில் பள்ளி மாடியிலிருந்து விழுந்து தோட்டக்காரர் உயிரிழந்தார்.

News image

கோப்புப்படம்

Updated On :26 ஜூலை 2022, 1:58 pm IST

கடலூர்: கடலூரில் பள்ளி மாடியிலிருந்து விழுந்து தோட்டக்காரர் உயிரிழந்தார்.

கடலூர் அருகில் உள்ள சாத்தங்குப்பம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் சூ.திவ்யநாதன் (50). கடலூர் சொரக்கால் பட்டில் உள்ள புனித மரியாள் மேல்நிலைப்பள்ளியில் தோட்ட பராமரிப்பாளராக வேலை பார்த்து வந்தார். 

இன்று, மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது முதல் மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக, ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் உடல் கூறாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கடலூர் புதுநகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரது உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.