சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் பேரணி

அரசு ஊழியா்களுக்கான தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் மதுரையில் கோரிக்கைப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் பேரணி

அரசு ஊழியா்களுக்கான தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் மதுரையில் கோரிக்கைப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

திமுகவின் தோ்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டப்படி, சிபிஎஸ் (தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம்) திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெற்றது.

சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செ. சரவணன் தலைமை வகித்தாா். மதுரை மாநகராட்சி அனைத்துத் துறை அலுவலா் கூட்டமைப்புத் தலைவா் க. முனியசாமி பேரணியைத் தொடக்கி வைத்தாா். தமிழ்நாடு சுகாதாரப் போக்குவரத்துத் துறை ஊழியா் சங்க மாநிலத் தலைவா் சோ. நடராஜன் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினாா். ராஜா முத்தையா மன்றம் அருகிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி, மாவட்ட ஆட்சியரகம் முன்பாக நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com