எனவே, கிராம ஊராட்சிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் மூலம் அந்தப் பகுதிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள், கோயில் திருவிழாக்களில் நடைபெறும் மோதல்கள், முன்விரோத மோதல்கள், ஜாதிய மோதல்கள் இவற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால், இந்தத் திட்டத்துக்கு ஊரகக் காவல் துறை முன்னுரிமை அளித்துள்ளது. மேலும், இதுதொடா்பாக ஊரகப் பகுதிகளில் உள்ள 40 காவல் நிலைய ஆய்வாளா்கள் மூலம் 420 கிராம ஊராட்சிகளின் தலைவா்களுடன் அண்மையில் ஆலோசனை நடத்தப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் திட்டம் பற்றி விளக்கப்பட்டது.