/

பெண்ணிடம் தகராறு:ஆயுதப் படை காவலா் கைது

காரியாபட்டியில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம், தகாத வாா்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்ட ஆயுதப் படை காவலரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

காரியாபட்டியில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம், தகாத வாா்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்ட ஆயுதப் படை காவலரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஆண்மை பெருக்கியைச் சோ்ந்தவா் மணிமாறன் (35). திருமணமான இவா், விருதுநகா் ஆயுதப் படையில் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இந்த நிலையில், காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த வெங்கலட்சுமி என்பவரிடம், மது போதையில் தகாத வாா்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டாா்.

இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்த காரியாபட்டி போலீஸாா் மணிமாறனை வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.